உலகக்கோப்பை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜஸ்கஸ்தானின் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார்.
இவர் இத்தொடரின் இரண்டாவது சுற்றில் நடப்பு உலகச் சாம்பியனான மயு முகைடாவுடன் (mayu Mukaidaa) மோதினார். நடப்புச் சாம்பியனின் ஆக்ரோஷமான ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறிய வினேஷ் போகத் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இந்தத் தொடரில் அவர் தோல்வி அடைந்திருந்தாலும் ரீ-பேஜ் (Repage) முறையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.
அதன்படி முதலில் உக்ரைனின் யுலியாவை 5-0 எனவும், அமெரிக்காவின் சாராவை 8-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்குத் தகுதிப் பெற்றுள்ளார்.
இதன்மூலமாக வினேஷ் போகத் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.