தமிழ்நாடு

tamil nadu

இறுதிக்கட்டத்தை எட்டிய பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்! இன்று நடால் - ஸ்வெரேவ் மோதல்

By

Published : Jun 3, 2022, 8:47 AM IST

Updated : Jun 3, 2022, 9:02 AM IST

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

nadal
நடால்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் 13 பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ரபேல் நடாலும் - அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதுகின்றனர். நடால் தனது காலிறுதி ஆட்டத்தில் ஜோகோவிக்கையும் , ஸ்வெரேவ் தனது காலிறுதி ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸையும் வீழ்த்தி இருந்தனர்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மரின் சிலிச் , கேஸ்பர் ரூட் ஆகியோர் மோதுகின்றனர். பெண்கள் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் கோகோ காஃப் - இகாஸ்விட்டெக் மோதுகின்றனர், கோகோ காஃப் தனது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை மார்டினா ட்ரெவிசனை 6க் 3 , 6க்கு 1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இருந்தார். இகா ஸ்விட்டெக் தனது அரையிறுதி ஆட்டத்தில் டாரியா கசட்கினாவை 6க்கு 2 , 6க்கு 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இருந்தார்.

coco gauff
Last Updated : Jun 3, 2022, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details