உலக துப்பாகி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு, இறுதிப் போட்டியில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் தகுதி பெற்றிருந்தார்.
இதில் அசத்தலாக விளையாடிய திவ்யான்ஷ் 250.1 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 250.0 புள்ளிகளை பெற்ற ஹங்கேரியின் பெனி இஸ்டவன் வெள்ளிப்பதக்கத்தையும், 228.4 புள்ளிகளைப் பெற்ற ஸ்லோவேக்கியாவின் ஜானி பேட்ரிக் வெண்கலப் பதக்கத்தையும் தட்டி சென்றனர்.