தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: செர்பிய நாட்டின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவை வீழ்த்தினார் குகேஷ்.. ! - ஈடிவி பாரத் செய்திகள்

Chennai Grand Masters Chess Championship 2023: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின்4வது சுற்றில், இந்தியன் கிரண்ட் மாஸ்டர் குகேஷ் - அலெக்சாண்டர் ப்ரெட்கேவை வீழ்த்தியுள்ளார்.

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2023
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2023

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 10:54 PM IST

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்' போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 15ஆம் சென்னை லீலா பேலஸில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த போட்டியானது வரும் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலக கிராண்ட் மாஸ்டர்கள் 8 பேர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

நேற்றுடன் 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று 4வது சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் - அலெக்சாண்டர் ப்ரெட்கே மோதிய ஆட்டத்தில், குகேஷ் 43வது நகர்விலும், பர்ஹாம் மக்சூட்லூ- சனான் சுகிரோவ் மோதிய ஆட்டத்தில் பர்ஹாம் மக்சூட்லூ தனது 34-ஆவது நகர்விலும் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து பாவெல் எல்ஜனோவ் - அர்ஜுன் எரிகைசி இடையே நடைபெற்ற போட்டியும், அரோனியன் - பி. ஹரி கிருஷ்ணா இடையே நடைபெற்ற போட்டியும் டிராவில் முடிந்தது.

இதையும் படிங்க:நீலகிரியில் மலைகளை குடைந்து கட்டப்படும் சொகுசு விடுதிகளால் நிலச்சரிவு அபாயம்.. பொதுமக்கள் பீதி!

இந்த சுற்றின் முடிவில் குகேஷ் , ஹரிகிருஷ்ணா ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் உள்ளனர். லெவோன் அரோனியன், பாவெல் எல்ஜனோவ், பர்ஹாம் மக்சூட்லூ, சனான் சுகிரோவ், அர்ஜூன் எரிகைசி தலா 2 புள்ளிகள் கொண்டு அடுதெடுத்த இடங்களிலும், அலெக்சாண்டர் ஒரு புள்ளியுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளனர்.

இவர்கள் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் கேண்டிடேஸ் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பாக அமையும். மேலும், மேலும், இந்த போட்டிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 15 லட்ச ரூபாயும், 2வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாயும், 3வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 8 லட்ச ரூபாயும் வழங்கப்படுகிறது.

அதே போல் 4வது முதல் 8வது இடம் பிடிப்பவர்களுக்கு முறையே 5 லட்சம் ரூபாயும், 4 லட்சம் ரூபாயும், 3.5 லட்ச ரூபாயும், 2.5 லட்ச ரூபாயும், 2 லட்ச ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:ரயில் நிலையங்களைச் சூழ்ந்த மழைநீர்: ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கிய பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கிய மீட்புக்குழு!

ABOUT THE AUTHOR

...view details