தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்காத அமெரிக்க வீராங்கனைக்கு 18 மாதம் தடை! - அமெரிக்க வீராங்கனைக்கு தடை

ஊக்கமருந்து சோதனையில் பங்கேற்காததால் அமெரிக்க தடகள வீராங்கனை டீஜா ஸ்டீவன்ஸூக்கு 18 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

American sprinter Stevens banned 18 months for missed tests
American sprinter Stevens banned 18 months for missed tests

By

Published : Jul 17, 2020, 7:36 AM IST

அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீராங்கனை டீஜா ஸ்டீவன்ஸ், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் ஏழாவது இடத்தைப் பிடித்தார். அதேபோல் 2017இல் லண்டனில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

இந்நிலையில், ஒரேகான் மற்றும் மேற்கு ஹாலிவுட்டில் கடந்த ஆண்டு தடகள ஒருமைப்பாடு பிரிவினர், இவரிடம் மூன்று முறை ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ள இருந்தனர். ஆனால் மூன்று முறையும் இந்த பரிசோதனையில் பங்கேற்கவில்லை. மேலும் தான் எங்கிருக்கிறேன் என்ற தகவல்களையும் டீஜா ஸ்டீவன்ஸ் தெரிவிக்கவில்லை.

ஒரு ஆண்டிற்குள் வீரர்/வீராங்கனை மூன்று முறை இருப்பிட விதிமுறைகளை மீறினால் அவர்களை தடை செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் டீஜா ஸ்டீவன்ஸூக்கு 18 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இவரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

25 வயதான டீஜா ஸ்டீவன்ஸ், கடந்த 2017இல் தேசிய அளவிலான 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details