2012ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது, ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக்குழுவின் ஊக்கமருந்து தடுப்புப் பிரிவு இவ்வழக்கை விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியின்போது ஊக்கமருந்தைப் பயன்படுத்தி, பதக்கங்களை வென்ற ரோமானிய வீரர்களின் பதக்கங்களை சர்வதேச ஒலிம்பிக்குழு பறித்துள்ளது.
இது குறித்து ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2012 லண்டன் ஒலிம்பிக்கின் மகளிர் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரோமானியாவின் ரோக்ஸானா கோகோஸ், ஆடவர் பளுதூக்குதல் பிரிவில் வெண்கலம் வென்ற ரஸ்வன் மார்ட்டின் ஆகியோர் ஊக்கமருந்தைப் பயன்படுத்தியது, அவர்களிடன் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது.