#Johorcup: 21 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அணிகளுக்கு இடையில் நடைபெறும் சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கித் தொடர் மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அண்டர் 21 அணி நியூசிலாந்து அண்டர் 21 அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே அதற்கான பலனை அனுபவித்தது.
இந்திய அணியின் தில்ப்ரீட் சிங் ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் கோலடித்து அசத்த, அவரைத் தொடந்து 14ஆவது நிமிடத்தில் ஷிலனந்த் லக்ரா கோலடித்து வெறித்தனம் காட்டினார். அதன் பின்னர் இந்திய அணியின் சஞ்சய் ஆட்டத்தின் 17 மற்றும் 22 ஆவது நிமிடங்களில் தொடர்ந்து இரு கோல்களை அடித்து நியூசிலாந்து அணியின் டிஃபென்ஸை கேள்விக்குள்ளாக்கினார்.