கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் தொடர் 80 நாள்களாக நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் தொடங்கப்பட்ட ப்ரீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் நட்சத்திர அணிகளான ஆர்சனல் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.
இந்தப் போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் அமெரிக்காவில் நடந்து வரும் Black Lives Matter என்ற போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். இதையடுத்து நடந்த போட்டியில் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. பின்னர் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்திக்கொண்ட மான்செஸ்டர் சிட்டியின் ஸ்டெர்லிங் ஆட்டத்தின் முதல் கோலை அடித்து அசத்தினார்.