இங்கிலாந்தில் கிளப் அணிகளுக்கு இடையே நடத்தப்படும் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பலம் வாய்ந்த செல்சி அணியை எவர்டன் அணி எதிர்கொண்டது.
இப்போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே எவர்டன் வீரர் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். இதன்பின் கோல் அடிக்க முயன்ற செல்சி அணி வீரர்கள் பந்தை அதிக நேரம் தங்கள் வசம் வைத்திருந்தனர். இருப்பினும் அவர்களால் எவர்டனின் வீரர்களின் டிபென்சிப் ஆட்டத்தைத் தாண்டி கோல் அடிக்க முடியாமல் போனது.