தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 24, 2020, 3:24 PM IST

ETV Bharat / sports

இங்கிலீஷ் பிரீமியர் லீக்: மேலும் 2 வீரர்களுக்கு கரோனா வைரஸ்...!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ள நிலையில், இதுவரை 8 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

premier-league-confirms-two-more-positive-coronavirus-cases
premier-league-confirms-two-more-positive-coronavirus-cases

ஜெர்மனியின் பண்டஸ்லீகா கால்பந்து தொடர் பார்வையாளர்களின்றி தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஜூன் மாதம் மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் கலந்துகொள்ளவிருக்கும் அணிகளின் வீரர்கள் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மே 19, மே 21, மே 22 ஆகிய நாள்களில் 996 பேருக்கு செய்யப்பட்ட சோதனையில், இரு கிளப்களைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த இரு வீரர்களும் 7 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.

முன்னதாக செவ்வாய் கிழமை 748 வீரர்கள், நிர்வாகத்தினர் ஆகியோருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 6 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம் பிரீமியர் லீக் அணிகளைச் சேர்ந்தவர்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பிரீமியர் லீக்கின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் மாஸ்டர்ஸ் பேசுகையில், '' ஜூன் மாத நடுவில் நிச்சயம் பிரீமியர் லீக் தொடங்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள், அணிகள் குறித்து அனைவரும் குணமடைந்த பின் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

பிரீமியர் லீக் தொடரில் 92 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இந்தப் போட்டிகள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஆடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பன்டெஸ்லிகா: புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்திய பேயர்ன் முனிச்

ABOUT THE AUTHOR

...view details