தமிழ்நாடு

tamil nadu

நெய்மருக்கு தடை!

நடுவர்களை விமர்சித்ததற்காக பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

By

Published : Apr 28, 2019, 11:37 AM IST

Published : Apr 28, 2019, 11:37 AM IST

நெய்மர் 3

சாம்பியன்ஸ் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் - பாடிஸ் செயிண்ட் ஜெர்மன் அணிகளுக்கு இடையேயான போட்டி 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் காயம் காரணமாக நட்சத்திர வீரர் நெய்மர் களமிறங்கவில்லை. இறுதி நேரத்தில் நடுவர் அளித்த பெனால்ட்டி வாய்ப்பு பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணிக்கு எதிராக அமைந்தது.

இதனால் கோபமடைந்த நெய்மர், சமூக வலைதளங்களில் நடுவர்கள் குறித்து தரக்குறைவாக பதிவிட்டார். இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து, நெய்மரை மூன்று போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து யுஈஎஃப்ஏ (UEFA) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details