தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரியல் மாட்ரிட் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்திருந்தால் லா லிகா தொடர் முடிந்திருக்கும்... - பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவர் ஜோன் காஸ்பர்ட்

கரோனா வைரஸால் லீக் போட்டிகள் நிறுத்திவைக்கப்படுவதற்கு முன், ரியல் மாட்ரிட் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்திருந்தால் நடப்பு சீசன் தொடர் முடிவு பெற்றிருக்கும் என பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவர் ஜோன் காஸ்பர்ட் விமர்சித்துள்ளார்.

La Liga would not have resumed had Real Madrid been on top: Ex-Barca boss Joan Gaspart
La Liga would not have resumed had Real Madrid been on top: Ex-Barca boss Joan Gaspart

By

Published : May 29, 2020, 2:01 PM IST

கரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் நடப்பு சீசனுக்கான லா லிகா தொடர் மார்ச் 12ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெயினில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து, நடப்பு சீசன் தொடர் மீண்டும் ஜூன் 12ஆம் தேதி தொடங்கப்படும் என ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜூன் 12 முதல் ஜூலை 19 வரை 33 நாள்களில் நடப்பு சீசனை முடிக்கவும் ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் லா லிகா தொடர் தொடங்குவது குறித்து பேசிய பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவர் ஜோன் காஸ்பர்ட், "கரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் நிறுத்திவைக்கப்படுவதற்கு முன், ரியல் மாட்ரிட் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்திருந்தால் லா லிகா தொடர் முடிவுக்கு வந்திருக்கும்" என விமர்சித்துள்ளார்.

பார்சிலோனா அணியின் முன்னாள் தலைவர் ஜோன் காஸ்பர்ட்

கரோனாவுக்கு முன் இதுவரை 27 போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 58 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல் மாட்ரிட் அணி 56 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. பொதுவாக, ஸ்பெயினில் சீசன் முடிவில் எந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறதோ அந்த அணிக்குதான் சாம்பியன் பட்டம் வழங்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஸ்பெயினில் இனி ஒவ்வொரு நாளும் லா லிகா போட்டிகள்தான்!

ABOUT THE AUTHOR

...view details