தமிழ்நாடு

tamil nadu

ரொனால்டாவிற்கு தடைவிதித்தால் அது பைத்தியக்காரத்தனம்: யுவெண்டஸ் வீரர் கொந்தளிப்பு!

By

Published : Mar 20, 2019, 12:29 PM IST

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ரொனால்டோவிற்கு தடை விதிப்பது முற்றிலும் பைத்தியக்காரத்தனம் என யுவெண்டஸ் வீரர் பெர்னார்டேஷி தெரிவித்துள்ளார்.

ரொனால்டா

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக்அவுட் ஆட்டத்தில், யுவெண்டஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ மேட்ரிட் அணியை வீழ்த்தியது. இதில், யுவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அவர், அத்லெடிக்கோ மேட்ரிட் அணியின் பயிற்சியாளரான டியாகோ சிமியோனை (Diego Simeone ) நோக்கி கொஜான்ஸ் எனப்படும் தன்முனைப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இது கால்பந்து போட்டிகளின் ஒழுங்கீனம் மீறி நடந்து கொண்டதால், ரொனால்டோ மீது விசாரணை நடைபெறும் என ஐரோப்பிய கால்பந்து குழு தெரிவித்துள்ளது. இதனால், அவருக்கு அதிகபட்ச தண்டணையாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து யுவெண்டஸ் அணி வீரர் பெர்னார்டெஷி பேசுகையில்,

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு சாம்பியன் வீரர். ஆட்டத்தின் வெற்றிக்காக அவர் கடுமையாக போராடுபவர். அத்லெடிக்கோ மேட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் செய்தசெயல் வெறும் கொண்டாட்டம் மட்டுமே. இதனால், அவருக்கு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தடை விதித்தால் அது முற்றிலும் பைத்தியக்காரத்தனம் என தெரிவித்தார்.

முன்னதாக, அத்லெடிக்கோ மேட்ரிட் அணியின் பயிற்சியாளர் டியாகோ சிமியோன் இதுபோன்ற தன்முனைப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், அவருக்கு 20 ஆயிரம் யூரோக்கள் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், யுவெண்டஸ் அணி, அஜக்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details