சர்வதேச கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்கள் பட்டியலில் முக்கியப் பங்கு வகித்தவர் அர்ஜென்டினாவின் டியாகோ மாரடோனா. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதலுக்கு சிகிச்சைப் பெற்று முடித்து வீடு திரும்பிய மாரடோனா, நவ. 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்குப் பல்வேறு விளையாட்டு வீரர்களும் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் மாரடோனாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அர்ஜென்டினா காவல் துறையினர், புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், மாரடோனாவின் மருத்துவர், அவரது உறவினர்களிடையே விசாரணை நடத்தக்கோரி உத்தரவிட்டது.