யுஇஎஃப்ஏ-இன் (ஐரோப்பிய யுனியன் கால்பந்து சங்கம்) செயற்குழு கூட்டம் ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போடப்பட்டுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான இறுதிப்போட்டி நடத்தப்படும் இடம் முடிவு செய்யப்படும். இந்தப் போட்டி நடைபெறும் நாட்டில்தான் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
மார்ச் மாதம் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது கரோனா பீதியால் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வீரர்கள், ரசிகர்களுக்கு ஏற்றவாறு மைதானங்கள், இதர தேவைகளை தேர்வு செய்யும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையில், போர்ச்சுகல் நாட்டின் ஜனாதிபதி மர்செலே ரீபேலா டி செளசா, கால்பந்து விளையாட்டை பிரியமாக கொண்ட தேசத்தினருக்கு ஆகஸ்டில் நற்செய்தி காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.