இந்த சீசனுக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடர், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொடரில் பங்கேற்ற வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் மிகவும் புகழ்பெற்ற அணியான அர்செனல் அணி, வருகிற திங்கட்கிழமை முதல் தங்களது அணி வீரர்களுக்குக் கடுமையான விதிமுறைகளுக்கு மத்தியில், கால்பந்து பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அர்செனல் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கால்பந்து விளையாட்டு வீரர்கள் அடுத்த வாரம் முதல் தங்களது பயிற்சிகளைத் தொடங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், பயிற்சியில் பங்கேற்கும் வீரர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முழுமையான பாதுகாப்புடனும் மட்டுமே பங்கேற்க வேண்டும்.