சீனாவின் ஹூபே உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியே அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை இந்த வைரஸுக்கு 492 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே நேற்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக ஏ.எஃப்.சி. தலைமையகத்தில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக்கில், சீனாவில் இருக்கும் கிளப் அணிகளுக்கான போட்டிகளின் தேதிகளைத் தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.