ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் கிளப் அணிகளுக்கு இடையேயான ஏஎஃப்சி கோப்பைத் தொடரில் சென்னை சிட்டி அணி பங்கேற்கவுள்ளது. இதில் தனது முதல் லீக் போட்டியில் சென்னை அணி மால்தீவ்ஸ் கிளப் அணியான மாசியாவை எதிர்கொள்ளவுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஏஎஃப்சி கோப்பைத் தொடருக்கு மாசியா அணி திரும்பியுள்ளது. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு சென்னையின் எஃப்.சி அணி ஏஎஃப்சி தொடரில் பங்கேற்றது.