தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி - இந்திய கிரிக்கெட் அணி

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியிலும் வென்ற இந்திய அணி 2- 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி
தொடரை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி

By

Published : Oct 3, 2022, 9:10 AM IST

கவுகாத்தி:இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா உடன் விளையாடுகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் 2ஆவது போட்டி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்தது.

முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமாா் யாதவ் 22 பந்துகளுக்கு 61 ரன்களையும், கேஎல் ராகுல் 28 பந்துகளுக்கு 57 ரன்களையும், விராட் கோலி 28 பந்துகளுக்கு 49 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் கேஷவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின் 238 ரன்கள் வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்க வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் பவுமா ரன்களின்றி 7 பந்துகளில் விக்கெட்டை இழந்தார். அவருடன் களமிறங்கிய டி காக் 48 பந்துகளுக்கு 69 ரன்களை எடுத்தார். அதேபோல அய்தீன் மார்க்ரம் 19 பந்துகளுக்கு 33 ரன்களை எடுத்தார். அதன்பின் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளில் 106 ரன்களை குவித்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களை மட்டும் தென்னாப்பிரிக்க அணியால் எடுக்க முடிந்தது. அந்த வகையில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதையும் படிங்க:டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகல்

ABOUT THE AUTHOR

...view details