தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விராட் கோலி இந்தியாவுக்கு வராமல் லண்டன் சென்றாரா?.. பிசிசிஐ கூறுவது என்ன? - etv bharat sports news

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தாயகம் திரும்புகிறார் என தகவல் வெளியான நிலையில், அவர் லண்டன் பயணம் மேற்கொண்டதாகவும், மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Virat Kohli
Virat Kohli

By ANI

Published : Dec 24, 2023, 6:51 PM IST

செஞ்சூரியன்: இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், வரும் 26ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும், 2வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்டருமான விராட் கோலி குடும்ப சூழல் காரணமாக அவர் இந்தியாவுக்கு திரும்புகிறார் எனவும், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோலி முன்கூடியே லண்டன் பயணத்தில் இருந்ததாகவும், மீண்டும் அவர் அணிக்கு திரும்பியதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் இந்திய அணியுடன் விராட் கோலி 4 பயிற்சி முகாமில் பங்கேற்று விட்டதாகவும், அதன் பிறகு தான் அவர் லண்டன் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த லண்டன் பயணம் குறித்து பிசிசிஐயிடம் ஏற்கனவே அறிவித்துவிட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணி 1992ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை இதுவரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல சாதனைகளை படைத்துள்ளது.

ஆசிய அணிகளால் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற முடியாது என கணிக்கப்பட்ட சமயத்தில் இந்திய அணி வெற்றிகளை குவித்து அசத்தியது. அதேபோல் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று அசத்தியுள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியவில்லை.

இந்த மோசமான சாதனையை தகர்க்க பல முன்னணி இந்திய வீரர்கள் முயன்றும் அது சாத்தியப்படவில்லை. தற்போது அந்த மோசமான சாதனையை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மாற்றுவார்களா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், 2023ஆம் ஆண்டு இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றாலும், உலகக் கோப்பையை தவறவிட்டது பெரும் கவலையை அளித்திருக்கிறது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி 2024ஆம் ஆண்டை ஒரு வரலாற்று மைல் கல்லுடன் இந்திய அணி தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details