மும்பை: இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கதா, டெல்லியை பேட்டிங் செய்ய பணித்தது.
அதன்படி முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஓப்பனர்கள் பிரித்திவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
29 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் பிரித்திவி ஷா 51 ரன்களும், 45 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் டேவிட் வார்னர் 61 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் தன் பங்குக்கு 14 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்தார்.
கடைசி வரை அக்ஸர் பட்டேலும், ஷர்துல் தாகூரும் அவுட் ஆகாமல் முறையை 22 மற்றும் 29 ரன்கள் குவித்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரூ ருசேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எட்டிப் பிடிக்கும் முனைப்பில் கொல்கத்தா பேட்டிங்-ஐ தொடங்கியது.