ஐபிஎல் 2021 லீக் போட்டியில் நேற்று (செப் 29) விராத் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற விராத் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து, பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வினி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணிக்கு அபார தொடக்கத்தை தந்தனர். இருவரும் முதல் விக்கெட் பார்ட்ன்ர்ஷிப்க்கு 77 ரன்கள் சேர்த்தனர்.
அபார தொடக்கத்தை வீணடித்த ராஜஸ்தான்
இந்த ஜோடியை டான் கிரிஸ்டியன் பிரித்தார். தொடக்க வீரரான ஜெயஸ்வால் 31 ரன்கள் எடுத்திருந்தபோது கிரிஸ்டியன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில் லூயிஸ் அரைசதம் அடித்தார்.
ராஜஸ்தான் 11 ஓவரில் 100 ரன்களை கடந்த நிலையில், கார்டன் பந்துவீச்சில் லூயிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தக்கட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் எட்டு விக்கெட் கையிலிருக்க 180-200 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக ராஜஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்கத் தொடங்கியது. அடுத்தடுத்த களத்திற்குவந்த வீரர்கள் பெரும்பாலும் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்து நடையைக் கட்டத்தொடங்கினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.