ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கோலாகலகமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று(அக்.06) நடைபெறவுள்ள 20ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சமீபத்தில் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மேலும் ஒரு சாதனையை படைக்கவும் காத்திருக்கிறார்.