ஐபிஎல் தொடரில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்று வரும் 34ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமளிக்கும் வகையில், சாம் கர்ரன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த வாட்சன் - டூ பிளேசிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாட்சன் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாப் டூ பிளேசிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து 58 ரன்களை எடுத்திருந்த டூ பிளேசிஸ் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த தோனியும் மூன்று ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.