நேற்று நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியில் மும்பை - சென்னை அணிகள் மோதின. அதில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டிக்கு பின்னர் இரு அணி வீரர்களும் கலந்துரையாடுகையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா - தல தோனி இருவரும் கைகுலுக்குவது போன்ற புகைப்படம் வெளியாகியது.
இந்நிலையில், தோனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட ஹர்திக் பாண்டியா, எனது நண்பர்... எனது சகோதரர், எனது லெஜண்ட் என தோனியை புகழ்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டபோது தான் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குள் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.