ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி மாலை டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழக்கம்போல் டாஸ் போடப்பட்டது.
அப்போது டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் டாஸில் வெற்றி பெற்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பின்னர் அவரிடம் போட்டி வர்ணணையாளர் அன்ஜும் சோப்ரா பேசிக் கொண்டிருந்தார். இதே வேளையில் டாஸில் தோற்ற ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி, மைதானத்தில் ஓரத்தில் அமர்ந்திருக்கும் தனது அணியினரை நோக்கி தனது கைகளில் உள்ள 9 விரல்களை காட்டியதோடு ஏதோ பெரிய சாதனை செய்தது போன்றும் செய்கை செய்தார்.