தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'தோனி களத்தில் இருக்கும்வரை எதிரணியின் வெற்றி தீர்மானிக்கப்படாது' - தோனி

பெங்களூரு: சென்னை அணியின் கேப்டன் தல தோனி களத்தில் இருக்கும் வரை போட்டியில் எதிரணியினரின் வெற்றி தீர்மானிக்கப்படாது என பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பார்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

விக்கெட் கீப்பர் பார்திவ் படேல்

By

Published : Apr 23, 2019, 12:09 PM IST

Updated : Apr 23, 2019, 4:28 PM IST

ஐபிஎல் தொடரின் 39ஆவது லீக் ஆட்டத்தின் சென்னை-பெங்களூரு அணிகள் மோதின. அதில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசிப் பந்தில், விக்கெட் கீப்பர் பார்திவ் படேல் செய்த ரன் அவுட், ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானித்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பார்திவ் படேல், 'உண்மையாக சொல்லவேண்டுமானால் தோனி இருக்கும்வரை எதிரணியினரின் வெற்றி தீர்மானிக்கப்பட்டாது. இறுதி ஓவர்களின்போது தோனி ஆடிய விதத்தைப் பார்க்கையில், அவரைத் தடுக்க முடியும் என நினைக்கவில்லை. அதனால் கடைசி பந்தை ஸ்லோயர் பந்தாக வீச வேண்டும் என முடிவு செய்தோம். அதனை தோனி தவறவிடுவார் என எதிர்பார்க்கவில்லை' என தெரிவித்தார்.

மேலும், பெங்களூரு அணியில் ஸ்டெயின் இணைந்ததையடுத்து, எங்கள் அணியின் பந்துவீச்சில் பலம் கூடியுள்ளது. வரும் போட்டிகளிலும் இதுபோன்று சிறந்த ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவோம் எனக் கூறினார்.

Last Updated : Apr 23, 2019, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details