பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 48, சூர்யகுமார் யாதவ் 38, ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணி தரப்பில் சாஹல் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 188 ரன் இலக்குடன் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் மொயின் அலி, பார்திவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், மொயின் அலி 13, பார்தீவ் பட்டேல் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மறுமுனையில், நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்களை எடுத்திருந்ததது.
இதன் பின், ஹெட்மயர், ஆவுட் ஆனாலும், மறுமுனையில் களத்தில் இருந்த டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறவைக்க கடினமாக போராடினார்.