தற்போது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்துவரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தி, ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார்.
இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. கிரிக்கெட் ரசிகர்கள், மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் அஸ்வின் மன்கட் முறையை பயன்படுத்தியதற்கு விமர்சனம் செய்துவந்தனர்.
எனினும் சில கிரிக்கெட் வீரர்கள் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.