12-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பின்னர் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ப்ரித்வி ஷா - தவான் இணை களமிறங்கியது. தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 16 ரன்கள் எடுத்தபோது, பொல்லார்ட்-ன் அசாத்தியமான கேட்ச்-ஆல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இங்ரம் - தவான் இணை நிதானமாக டெல்லியின் ஸ்கோரை உயர்த்தியது.
பின்னர் அதிரடிக்கு மாறிய இங்ரம் 32 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து தொடக்க வீரர் தவான் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து டெல்லி அணி 15 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த நட்சத்திர வீரர் பந்த் அதிரடியாக விளையாட, ஸ்கோர் கடகடவென உயர்ந்தது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் 6,4,6 என பதினாறு ரன்களை விளாசினார் ரிஷப் பந்த்.