தமிழ்நாடு

tamil nadu

வெளியான கரோனா பரிசோதனை முடிவுகள்; பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்...!

By

Published : Nov 15, 2020, 6:06 PM IST

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்களுக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில், அனைத்து வீரர்களுக்கும் கரோனா இல்லை என்று உறுதியாகியுள்ளது.

touring-indians-clear-covid-19-test-begin-physical-training
touring-indians-clear-covid-19-test-begin-physical-training

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகளில், எந்த வீரருக்கும் கரோனா இல்லை என்று உறுதியான நிலையில், வீரர்கள் அனைவரும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.

சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், சாஹல், குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர் உமேஷ், நடராஜன், பேட்ஸ்மேன்கள் புஜாரா, ஹர்திக் ஆகியோர் சிட்னி ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் பயிற்சி செய்யும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய வீரர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கரோனா சோதனை முடிவுகள் நல்ல செய்தியைக் கொடுத்துள்ளது. முதலாவதாக ஒருநாள் தொடர் நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிபிஎல் 10: சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிராத்வெய்ட்

ABOUT THE AUTHOR

...view details