ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்ட் ஆகிய தொடர்களில் பங்கேற்கிறது. அடுத்த மாதம் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில், இந்திய கேப்டன் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் நாடு திரும்பவுள்ளார்.
இதனால் இந்திய அணி பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என கூறப்பட்டுள்ளதால், அவர் களமிறங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரராக மயாங்க் - ரோஹித் இணை களமிறங்குவதற்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் கோலியின் இடத்தில் கேஎல் ராகுல் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.
ஒருவேளை அவர் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டால், இளம் வீரர்களான ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம். ஆனால் ப்ரித்வி ஷாவின் ஐபிஎல் ஃபார்ம் பிரச்னை உள்ளது. ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக இளம் வீரர்கள் ப்ரஷரை தாக்குப்பிடிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.