தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சியில் ஈடுபடவுள்ள ரோஹித்! - ஐபிஎல் 2020

துபாய்: ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ரோஹித் ஷர்மா தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சி எடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aus-vs-ind-rohit-sharma-set-to-complete-rehabilitation-at-nca-post-diwali
aus-vs-ind-rohit-sharma-set-to-complete-rehabilitation-at-nca-post-diwali

By

Published : Nov 11, 2020, 3:43 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய தொடருக்குத் தயாராகிவருகின்றனர். அதேபோல் காயம் ஏற்பட்டுள்ள வீரர்கள் பலரும் தீபாவளி பண்டிகை முடிவடைந்த பின், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமிக்குத் திரும்பவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக ரோஹித் ஷர்மா நாடு திரும்பிய பின்னர், தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு தேசிய கிரிக்கெட் அகாதமிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளிலிருந்து கேப்டன் கோலி விலகியுள்ளதால், ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி நாளை ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஒன்பதாவது அணி... மெகா ஏலம்' ஐபிஎல் 2021 இல் காத்திருக்கும் சுவாரஸ்யங்கள்!

ABOUT THE AUTHOR

...view details