டிரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று டிரினிடாட் நகரில் உள்ள பிரயன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய வீரர்கள் களமிறங்கினர். அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொடக்க ஆட்டக்காரராக சூர்யகுமார் யாதவ் இறங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் அடித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷப் பந்த் , ஹர்திக் பாண்ட்யா சொதப்பினாலும் தினேஷ் கார்த்திக் நிலைத்து நின்று ஆடினார். 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இந்தியா 150 ரன்களை கடக்க உதவினார்.