தரம்சாலா:இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்க இந்தியா வந்துள்ளது.
டி20 தொடர் பிப்ரவரி 24இல் தொடங்கி இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில், மூன்றாவது போட்டி பஞ்சாப் மாநிலம் தர்மசாலாவில் உள்ள ஹெச்.பி.சி.ஏ. மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 27) நடைபெற்றது.
கேப்டன் இன்னிங்ஸ்
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. ஆனால், இலங்கை அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. குணதிலகா ரன்னேதும் இன்றியும், நிசங்கா 1 ரன்னிலும், அசலங்கா 4 ரன்களிலும், லியானாகே 9 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதையடுத்து, சண்டிமலும், கேப்டன் ஷனகாவும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். சண்டிமல் 22 ரன்களில் வெளியேறினாலும், ஷனகா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். இறுதியில், இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது. குறிப்பாக, கடைசி 5 ஓவர்களில் 68 ரன்களை இலங்கை குவித்தது.
ரோஹித் - (துஷ்மன்) சமீரா
இலங்கைத் தரப்பில் கேப்டன் ஷனகா 74 ரன்களுடனும், கருணாரத்னே 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல், சிராஜ், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
147 ரன்கள் என்ற எளிய இலக்குடன் சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கியது. இரண்டாவது ஓவரிலேயே ரோஹித் சர்மா, சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், வெள்ளைப் பந்து போட்டிகளில் சமீரா ஆறாவது முறையாக ரோஹித் சர்மாவின் விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.