மொஹாலி: இலங்கை அணி இந்தியாவுக்குத் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் இன்று (மார்ச் 4) தொடங்கியுள்ளது.
மொஹாலி ஐ.எஸ் பிந்தரா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி, டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டி, விராட் கோலிக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி என்பதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
ஆறுதல் தொடக்கம்
இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த இணை ஆரம்பத்தில் இருந்தே சீராக ரன்களைச்சேர்த்து வெறும் 59 பந்துகளில் 52 ரன்களைக் குவித்தது.
அப்போது பந்துவீசி வந்த லஹிரு குமாரா, ரோஹித் சர்மாவுக்கு பெரும்பாலும் ஷார்ட் - லெந்த் பந்துகளையே வீசினார். இருப்பினும், ரோஹித் தனது கிளாஸிக்கான புல்-ஷாட்டையும், ஆன்-டிரைவ் ஷாட்டையும் அடித்து பவுண்டரிகளைக் குவித்தார்.
செட்டிங்கில் சிக்கிய ரோஹித்
10ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தை இடுப்புக்கு மேல் சற்று பவுன்சராக குமாரா வீச, ரோஹித் பைன்-லெக் திசையில் தூக்கி அடித்தார். அதை ஆடாமல் அசையாமல் அற்புதமாக சுரங்கா லக்மல் கேட்ச் பிடிக்க, கேப்டன் ரோஹித் 29 ரன்களில் நடையைக்கட்டினார். மூன்றாவது வீரராக, ஹனுமா விஹாரி களத்திற்கு வந்தார்.
மறுமுனையில், நிதானமாக ஆடிவந்த மயாங்க் அகர்வால் 33 ரன்களில், லசித் எம்புல்தெனியா பந்துவீச்சில் எல்.பி.டயிள்யூ முறையில் வெளியேறினார். இதையடுத்து, தனது 100ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை ஆட விராட் கோலி களம் புகுந்தார்.
விராட் 8000
விராட் கோலி - மயாங்க் அகர்வால் ஜோடி இலங்கை பந்துவீச்சினை லாவகமாக எதிர்கொண்டனர். மதிய உணவு இடைவேளை முன்னர், இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எடுத்தது. இடைவேளைக்குப் பின்னரும், இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. விஹாரி அரைசதம் கடந்த நிலையில், விராட் கோலி நிதானம் காட்டி வந்தார்.
விராட் கோலி 32 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் அரங்கில் தனது 8000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம், 8000 ரன்களைக் கடக்கும் ஆறாவது இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார்.
மீண்டும் மிஸ்ஸானது 71*