அகமதாபாத்:ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில் "நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எங்களால் முடிந்த வரை அனைத்தையும் முயற்சித்தோம். ஆனால் எதுவும் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை.கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி நல்ல கூட்டணி அமைத்தனர். நாங்கள் 270 முதல் 280 ரன்களை அடிப்போம் என எதிர்பார்த்தோம் ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எதிர்பார்த்த ரன்களை எடுக்க முடியவில்லை. 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் முயற்சித்தோம். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்துவிட்டது என நான் நினைக்கிறேன். ஆனால் அதை நான் தோல்விக்கான காரணமாக நான் கூற விரும்பவில்லை. 240 ரன்கள் எடுத்து களத்தில் இறங்கும் போது எதிர் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
ஆனால் டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷென் ஆகியோர் நல்ல பார்ட்னர்சிப் அமைத்து எங்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பவுலர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார்கள் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தால் அதன் தாக்கம் வேறு விதமாக இருந்து இருக்கும்" எனத் தெரிவித்தார்.