தமிழ்நாடு

tamil nadu

'ப்ளிஸ் இதை செய்யாதீர்கள்..!' - இந்திய ரசிகர்களுக்கு நியூசி., வீரர் வேண்டுகோள்!

By

Published : Jul 13, 2019, 6:39 PM IST

"உலகக்கோப்பை இறுதி போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கியிருந்தால், தயவு செய்து அதை மறுவிற்பணை செய்துவிடுங்கள்" என்று, இந்திய ரசிகர்களை நியூசிலாந்து வீரர் நீஷம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் நியூசிலாந்து வீரர்

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடும் என்ற நம்பிக்கையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னதாகவே, இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர். ஆனால், இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, தொடரிலிருந்து வெளியேறியது.

நீஷம்

மறுமுனையில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 27 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்நிலையில், இறுதிப் போட்டிக்காக டிக்கெட்டுகளை வாங்கியிருந்த இந்திய ரசிகர்களில் ஒரு சிலர், அதிக தொகைக்கு விற்பனை செய்துவருகின்றனர். இது குறித்து நியூசிலாந்து வீரர் நீஷம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், "அன்பிற்குரிய இந்திய ரசிகர்களே... இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கியப் பிறகு, போட்டியை நேரில் பார்க்க வேண்டாம் என முடிவு செய்திருந்தால், தயவு செய்து அந்த டிக்கெட்டுகளை ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மறுவிற்பனை செய்துவிடுங்கள். அதிக தொகைக்கு, டிக்கெட்டுகளை விற்பணை செய்து லாபம் அடைவதைவிட போட்டியை பார்க்க விரும்பும் மற்ற ரசிகர்களுக்காக இதை செய்யுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details