இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக, ரோகித் ஷர்மா 140, கோலி 77, கே.எல்.ராகுல் 57 ரன்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகர் சமான், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து புவனேஷ்வர் குமார் திடீரென விலகினார். மூன்றாவது ஓவரில் பந்து வீச வரும்போது, அவரது இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக பெவிலியன் திரும்பினார்.