தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிசிசிஐ ஒப்புதலுக்காக காத்திருக்கும் யுவராஜ்!

ஹைதராபாத்: அதிரடி கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ ஒப்புதலுக்காக காத்திருப்பதாக பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

By

Published : Sep 12, 2020, 10:57 AM IST

Yuvraj Singh
Yuvraj Singh

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க முடியாத முக்கிய வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த யுவராஜ் சிங், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதன்பின் ஐபிஎல், மற்ற டி20 லீக் போட்டிகளில் கலந்துகொண்டுவந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம், யுவராஜ் சிங்கை தொடர்புகொண்ட பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலர் புனீத் பாலி, யுவராஜ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடினால், அது இளைஞர்களுக்கு பெரும் அனுபவமாக இருக்கும் என்று யுவராஜ் சிங்கிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யுவராஜ் சிங்

புனீத் பாலி கோரிக்கையை ஏற்றுக்கொண்ட யுவராஜ் சிங், ஏற்கனவே இது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இருப்பினும் யுவராஜ் சிங் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட பிசிசிஐ விதிகள் அனுமதிக்காது என்ற ரீதியில் தகவல் பரவின. இது குறித்து பிசிசிஐ சேர்ந்த ஒருவர் கூறுகையில், "யுவராஜ் சிங் ஒய்வுபெற்றவுடன் அவருக்கு குறிப்பிட்ட தொகை (One time benefit) வழங்கப்பட்டது.

யுவராஜ் சிங்

அதன்பின் அவருக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. எனவே, அவர் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவாரானால் அது குறித்து பிசிசிஐ இறுதி முடிவு எடுக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய புனீத் பாலி, "பிசிசிஐ இன்னும் ஒப்புதலை வழங்கவில்லை. அவரது (யுவராஜ்) முடிவை பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஏற்றுக்கொண்டது, ஆனால் பிசிசிஐயிடமிருந்து இது தொடர்பான ஒப்புதலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார்.

யுவராஜ் சிங்

2000ஆவது ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 40 டெஸ்ட், 304 ஒருநாள், 58 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க: ரெய்னாவின் இடத்திற்கு ராயுடுவே சரி: ஸ்காட் ஸ்டைரிஸ்!

ABOUT THE AUTHOR

...view details