கிரிக்கெட் வீரர்களை வைத்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சாலைகளில் நடத்தை விதிகள் குறித்து மக்களின் மனநிலையை மாற்றுவதற்காகவும் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (பிப்.26) சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான், வேகப்பந்துவீச்சாளர் வினய் குமார் ஆகியோர் அறிவித்தனர். இதற்கிடையே மார்ச் 5ஆம் தேதி தொடங்கவுள்ள சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடருக்கான இந்தியா லெஜண்ட்ஸ் அணியில் யூசுப் பதான் மற்றும் வினய் குமார் ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.