இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கங்குலி. 2003 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிச் சுற்றுக்கு கொண்டு சென்ற இவர், பயிற்சியாளர் கிரேக் சாப்பலின் வருகைக்கு பிறகு 2005இல் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
அதன்பிறகு 2006, 2007இல் கம்பேக் தந்து அதிகமான ரன்களை அடித்து இருந்தாலும் அதன்பிறகு அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக 2007இல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இவர் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து இவர் 2008இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது பிசிசிஐயின் தலைவராக விளங்கும் இவர் தனது கடைசி கால கிரிக்கெட் குறித்து பெங்கால் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் மனம் திறந்து பேசிய அவர்,