தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியானது நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது.
மேலும் இந்த போட்டிகாக இரு அணி வீரர்களும் இரு தினங்களுக்கு முன்பாகவே அங்கு வந்து தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் , தென் ஆப்பிரிக்க நாட்டு ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
அவர்கள் எங்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையையும் வைத்துள்ளனர். பவுண்டரிலைனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்போதும் போன்றே எங்களிடன் ஆட்டோகிராஃப் கேட்கின்றனர்.
இதனை காணுகையில் எங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். நாளையப்போட்டியைப் பற்றிய பேசிய அவர், கடந்த 18 மாதங்களாக நாங்கள் இந்த மைதானத்தில் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்றது கிடையாது.