இந்தியாவில் நடத்தப்படும் விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் தமிழ்நாட்டு அணி ராஜஸ்தான், பெங்கால், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, சர்வீசஸ், மத்திய பிரேதசம், குஜராத், பீஹார் உள்ளிட்ட அணிகளுடன் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதில், முதலில் 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது அணியிலிருந்து நீ்க்கப்பட்டுள்ளார்.