2015இல் அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் அகில இந்திய விளையாட்டுக் குழு (ஏஐசிஎஸ்). இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவில் ஆலோசகர் பட்டியலில் விளையாட்டுகளில் சாதித்தவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அந்தவகையில், டிசம்பர் 2015ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு மே வரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில், தற்போது வெளியான புதிய ஆலோசகர் குழுவில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து சச்சின், விஸ்வநாதன் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.