தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெங்குவால் பாதிக்கப்பட்ட இலங்கை வீரர்; பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகல்! - டெங்குவால் பாதிக்கப்பட்ட லக்மல்

லண்டன்: இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் லக்மல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், பாகிஸ்தானில் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

suranga-lakmal-out-of-pakistan-test-series-due-to-dengue
suranga-lakmal-out-of-pakistan-test-series-due-to-dengue

By

Published : Dec 9, 2019, 12:56 PM IST

சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடியது. இதையடுத்து வரும் 11ஆம் தேதி முதல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்ட நிலையில், இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் லக்மல் டெங்கு காய்ச்சல் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கை அணி வெளிநாட்டு தொடர்களில் விளையாடும்போது, லக்மல் முக்கிய வீரராக அடையாளம் காணப்பட்டு வந்தார். தற்போது இவர் தொடரிலிருந்து விலகியிருப்பது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வீரர் லக்மலுக்கு பதிலாக இளம் வீரர் அஷிதா ஃபெர்னாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஃபெர்னாண்டோ விளையாடாத நிலையில், இந்த தொடரில் அறிமுகமாகவுள்ளார்.

இதையும் படிங்க: டூ பிளசிஸ் கூறிய பதிலால்... மைதானத்தில் சிரிப்பலை!

ABOUT THE AUTHOR

...view details