தமிழ்நாடு

tamil nadu

பாகிஸ்தானுடனான தொடரை ரத்து செய்த தென் ஆப்பிரிக்கா!

வீரர்களின் நலன் கருதி பாகிஸ்தானுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரத்து செய்வதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

By

Published : Feb 14, 2020, 6:23 PM IST

Published : Feb 14, 2020, 6:23 PM IST

South africa cancels pakistan tour
South africa cancels pakistan tour

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இந்தத் தொடர் முடிந்த பின் அடுத்த மாதம் இந்தியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், பாகிஸ்தானில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தொடர் மார்ச் 18இல் முடிந்த பின், மார்ச் 22 முதல் 29 வரை பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடவிருந்தது. அதன்பின் தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளனர்.

இந்நிலையில், வீரர்கள் ஓய்வில்லாமல் விளையாடுவதால் அவர்களது நலன் கருதி பாகிஸ்தானுடனான டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தொடரை கூடிய விரைவில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசிக்கவிருப்பதாக பாகிஸ்தான் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:2011 உலகக் கோப்பை இறுதிச் சுற்றை நினைத்து சிலிர்க்கும் சச்சின்!

ABOUT THE AUTHOR

...view details