இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற வங்கதேச அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்க இரண்டாவது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இது 100ஆவது சர்வதேச டி20 போட்டியாக அமைந்தது. இதன்மூலம் 100 சர்வதேச டி20 போட்டிகளை ஆடும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதனிடையே பிசிசிஐ தலைவர் சவுரங் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், 100ஆவது டி20 போட்டியில் விளையாடிய ரோகித் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். மேலும் அந்தப் பதிவில், ரோகித் சர்மா இந்திய அணிக்கு கிடைத்த சொத்து என ஆச்சரியத்துடனும் குறிப்பிட்டிருந்தார்.