தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2020, 10:49 AM IST

ETV Bharat / sports

ஓய்வுக்கு பின் வர்ணனையில் கலக்குவேன்..!

எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக இருப்பதால், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின் நல்ல ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும், வர்ணனையாளராகவும் இருப்பேன் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

shikhar-dhawan-feels-he-can-be-successful-commentator
shikhar-dhawan-feels-he-can-be-successful-commentator

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கட்டாய ஓய்வில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள், இன்ஸ்டாகிராமில் பல்வேறு வீரர்களுடன் உரையாடி வருகின்றனர். இதில் நேற்று இந்திய வீரர்கள் அஸ்வினும், ஷிகர் தவானும் உரையாடினர்.

அப்போது ஷிகர் தவான், எனக்கு அதீத நகைச்சுவை உணர்வு இருப்பதால், சிறந்த வர்ணனையாளராக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்தி மொழியில் வர்ணனை செய்யும் போது கொஞ்சம் அதிகமாகவே நகைச்சுவையாக இருக்கும் என நினைக்கிறேன். மக்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது'' என்றார்.

இந்திய அணியின் தொடக்க வீரராக உள்ள தவான், நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாலியல் குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஹய்தி கால்பந்து சம்மேளனத் தலைவர்...!

ABOUT THE AUTHOR

...view details