உலகில் கால்பந்துக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு போட்டி என்றால் அது கிரிக்கெட்தான். அதிலும் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனாலும் ஒரு சில நட்சத்திர வீரர்கள் மட்டுமே இந்திய அணியிலும் இந்திய ஏ அணியிலும் விளையாடிவருகின்றனர்.
இந்நிலையில் ரஞ்சி கிரிக்கெட் என்னும் உள்ளூர் போட்டிகளில் சௌராஷ்ட்ரா அணிக்காக விளையாடிவரும் ஷெல்டன் ஜாக்சன் என்ற வீரர் இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு பற்றி வேதனைத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில், 'ரஞ்சி அணிக்காக எங்களது திறமைகளை நாங்கள் வெளிப்படுத்தினாலும் எங்களால் இந்திய ஏ அணிக்கு கூட தகுதி பெறமுடியவில்லை, ரஞ்சி போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நன்றாக விளையாடினாலும் எங்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பூஜ்ஜியமே! இதனால் எங்களது கிரிக்கெட் வாழ்க்கை ரஞ்சி போட்டிகளுடனே முடிந்துவிடும் என்ற கவலை உள்ளது' எனப் பதிவிட்டிருந்தார்.